P

Payangara Parakiramam

பயங்கர பராக்கிரமம் செய்யும்

பயங்கர பராக்கிரமம்
செய்யும் தேவன் இருப்பதினால்
அஞ்சிடேன் என்றுமே
ஜெயமே நான் அடைந்திடுவேன்

அவர் மா அன்பினால் என்னை மாற்றி தினம்
அதிசயம் காட்டி இணங்கச் செய்தார்
ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன்
தேவாவி என் மீது தங்குவார்

அவர் நல்லவரே அவர் வல்லவரே
சோதித்து அறியும் கர்த்தரிவர்
தேர்ச்சி என்றும் உண்டாகும்
காரியம் அவர் மீது சாட்டினேன்

அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார்
உதவிகள் அவரால் கிடைத்திடுமே
உண்மையினை காத்திடுவேன்
எனக்காக யாவையும்செய்குவார்

அவர் வார்த்தை என்றும் எந்தன் உள்ளத்திலே
எரிந்திடும் தீ போல் பரவிடுதே
போதனையை பெற்றிடுவேன்
என்றென்றும் அவர் வாக்கை காப்பேன்

அவர் நல்நாமத்தை என்றும் நான் பாடுவேன்
அவரது கரமே எழும்பிடுமே
விடுதலையை அளித்திடுவார்
எந்நாளும் அவர் நாமம் போற்றுவேன்