P

Podhum Podhum Sodhanaigal

போதும் போதும் சோதனைகள்

போதும் போதும் சோதனைகள் போதுமே
வேண்டும் வேண்டும் ஆறுதலும் வேண்டுமே
தயாபரனே…

தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே

தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன்
தப்பிக்க வழியில்லையா
தப்பே செய்யாத என் இயேசு தேவா
தப்பிக்க வழி செய்வீரா

கண்களின் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்
ஜீவனில் பெருமைகொண்டேன்
எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று
உம்மையே நோக்கி நின்றேன்

பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது
கர்த்தரை நான் மறக்கிறேன்
பாவத்தின் பலனை நான் அடையும்போதோ
கர்த்தரை நான் நினைக்கிறேன்