S

Sthothiramae Sthothiramae Appa Appa

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
வல்லவரே நல்லவரே வல்லவரே நல்லவரே

கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
ரட்சகரும் தேவனுமானார் – நான்
நம்பின என் துருகமும் கேடகமானார்
ரட்சணிய கொம்புமானார்

தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர் – ஒரு
சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்

உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் – உம்
காருணியத்தால் பெரியவனானேன்
நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர்
வழுவாமல் நடந்து செல்கிறேன்