E

Ennaiyae Arpanithean Yesuvae

என்னையே அர்பணித்தேன்

என்னையே அர்பணித்தேன்
இயேசுவே உம் சேவைக்கே
ஆவி ஆத்ம சரீரத்தில்
ஜெயம் தந்தாட்கொள்வீர்

லோக சிற்றின்பம் வேந்தனே
தியாகத்தின் பாதையிலே
பூலோக நேசம் வேண்டாமே
போதும் உம் அன்பென்றுமே

பாரில் பாடுங்கள் வந்தாலும்
நோய் பிணி வருத்தினாலும்
வழுவாமல் தினம் சென்றிட
வல்லமை ஈந்திடுவீர்

ஜீவ காலம் முழுவதும்
தேவனின் சேவை செய்வேன்
என் சித்தம் யாவும் நீக்கியே
உம் சித்தம் செய்திடுவீர்

பூவில் உம் சுவிஷேசத்தை
பூரணமாய் உரைப்பேன்
கால் மிதிக்கும் இடம் தருவீரே
கர்த்தர் என்னோடிருப்பீர்