T

Thevanaal Koodatha

தேவனால் கூடாதுதொன்றுமில்லையே

தேவனால் கூடாதுதொன்றுமில்லையே – என்
இயேசுவால் ஆகாததில்லையே – நம்
கர்த்தர் நல்லவர் நம் தேவன் வல்லவர் – நம்
இயேசு பெரியவர் அவர் மிகவும் உயர்ந்தவர்
வல்லமையுடையவர் என்று மகிமை நிறைந்தவர்
தேவனால் கூடாதுதொன்றுமில்லையே
இயேசுவால் ஆகாததில்லையே

வற்றாத செங்கடலைப் பிளந்தவர் அவரே தம்
ஜனத்தைக் காக்க கடலில் வழி திறந்தவர் அவரே
வாழ வழி இல்லாதோரின் வறுமை நீக்கும் தெய்வமாம்
இல்லை என்று ஏங்குவோர்க்கு அள்ளித்தரும் வள்ளலாம்

விழியிழந்த குருடருக்கும் பார்வையை தந்தார் – பாவ
இருளினிலே இருப்பவர்க்கும் ஒளியினை தந்தார்
வியாதியில் வாடுவோர்க்கு விடுதலை தரும் தெய்வமாம்
வெற்றிவேந்தன் இயேசுவாலே கூடாதது இல்லையாம்

உலர்ந்து போன எலும்புகளில் உயிர்வரச் செய்தார் – பாவ
உணர்வு இன்றி கிடப்பவரை உயிர்பெறச் செய்தார்
பரிசுத்த ஆவியினால் பெலப்படுத்தும் தேவனாம்
பக்தர்களின் பாதையில் தினம் அற்புதம் செய்யும் தேவனாம்