T

Thiruppatham Nambi

திருப்பாதம் நம்பி வந்தேன்

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தம தன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்

என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
உமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுமே