தொல்லைகள் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
தொல்லைகள் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் தோன்றிடும்
இருளாய்த் தோன்றும் என்றும்
சோதனை வரும் நேரத்தில்
சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரனுன்னைக் காக்க வல்லோர்
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
உண்டெனக்கு உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே
ஐயமிருந்ததோர் காலத்தில்
ஆவிக் குறைவால் தான்
மீட்பர் உதிரப் பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்றே
இயேசென்னைக் காக்க வல்லோர்
என்ன வந்தாலும் நம்புவேன்
என்நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
இவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன கஷ்டங்கள் வந்தாலும் – அவர்
என்னைக் கைவிடமாட்டார்