U

Ullam Aanantha

உள்ளம் ஆனந்த கீதத்திலே

உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்கிறதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்

பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாவத்தைச் சுமந்தவரே

பல ஆசையின் ஆழியிலே
அழிந்தே மனம் சோர்ந்திருந்தேன்
அந்த பாசக் கரங்களிலே
அணைத்தே என்னைத் தூக்கினாரே

அந்தகாரத்தின் வாழ்க்கையிலே
தடுமாறியே நான் அலைந்தேன்
நிறைவானதோர் பேரொளியாய்
எந்தன் பாதையில் தோன்றினாரே

மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைவிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார்

உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே