U

Unnaiye Veruthuvittal

உன்னையே வெறுத்துவிட்டால்

உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்

சிலுவை சுமப்பதனால்
சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும்
நிரந்தர அமைதிவரும்

பெயர் புகழ் எல்லாமே
இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே
நமது மறையட்டுமே

நாளைய தினம் குறித்து
கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம்
இனியும் நடத்திடுவார்

சேர்த்து வைக்காதே
திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே
குறைவின்றி காத்திடுவார்

தன்னலம் நோக்காமல்
பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை
என்றுமே இருக்கட்டுமே