வா எங்கள் ஸ்வாமி
வா எங்கள் ஸ்வாமி
வா இந்த நேரத்திலே
உம் பாதம் சேவிக்க இவ்வேளை
சுத்தரே அடிபணிந்தோம்
வா எங்கள் தேவனே
வந்தெம்மைக் காத்திடுமே
தேடியே உம் பாதம் அண்டினோம்
தெய்வமே அருள் தாரும்
வா எங்கள் கர்த்தரே
வந்தெம்மைக் காருமையா
கருணையின் வடிவான கடவுளே
காத்தெனக் கருள் தாரும்
வா எங்கள் நாதனே
நாடி வந்தோமே
நித்திய ஜீவ ராஜனே
நமோ நமோ நாதா