P

Paavi Nee Odivaa

பாவி நீ ஓடி வா

பாவி நீ ஓடி வா – அன்பர்
இயேசு அழைக்கிறார்
பாவம் நீக்கிட வா – உந்தன்
பாரம் போக்கிட வா

உந்தனின் பாவத்தினால்
சிந்திய இரத்தத்தைப் பார்
தந்தை தம் அன்பினாலே – உன்னைப்
பந்தமாய்ப் பாதுகாப்பார்

வெண்ணங்கி நீ தரிக்க
முள்முடி சூட்டினாரே
தீராத பாவம் தீர்க்க – நீயும்
நேராக இன்றே வாராய்

ஆத்தும தாகம் தீர்க்க
ஆண்டவர் கூறுகின்றார்
தாகம் அடைந்தேன் என்று – நீயும்
தீர்ப்பாயோ அவர் தாகத்தை