V

Vanthanam Vanthanamae

வந்தனம், வந்தனமே

வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம்

சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே

சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள்
சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே

சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்ய
சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே

உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் –
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே

மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை – உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே