Y

Yesuvandai Vanthiduvai

இயேசுவண்டை வந்திடுவாய்

இயேசுவண்டை வந்திடுவாய்
பாவங்கள் நீக்கி ரட்சிப்படைந்திடவே

சிலுவையிலே உன் பாவங்கள் போக்கிடவே மரித்தார்
சிந்தனை செய்து இந்த வேளை வாராயோ

துன்பத்திலும் மாயையிலும் மாண்டழியாமலே நீ
இயேசெனும் ஜீவத் தண்ணீரண்டை வாராயோ

அன்னையிலும் தந்தையிலும் அன்புள்ள
ஆண்டவரேஇன்றுன்னைமீட்கஅன்பாய்அழைக்கிறாரே

நேற்றும் இன்றும் என்றும்மாறா இயேசுன்னை அழைக்கிறார்
நம்பிக்கையோடு தஞ்சம் பெற வாராயோ

நாளைக்கு நீ உயிருடனே இருப்பது நிச்சயமோ
நாட்களெல்லாம் வீண் தாமதம் செய்திடாதே