தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்

பெப்ரவரி 11

“தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்.” ரோமர் 8:32

தமது ஜனங்களை இரட்சிக்கும்படிக்கு பிதா தம்முடைய குமாரனையும் பெரிதாக எண்ணவில்லை. இவர்களை ஆறுதல்படுத்த அவரைத் தண்டித்தார். பாவம் செய்த தூதர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத்தில் அதிகமாய் பாவம் செய்தவர்களையும் தண்டித்தார். ஆனால் நம்மையோ இரட்சிப்பதற்கு அதிகம் விருப்பம் கொள்கிறார். இந்த அன்பை யோசித்தால் ஆச்சரியமானது. அவரே நம்மை இரட்சித்தார், இரட்சிக்கிறார், இரட்சிப்பார். இதற்காகத்தான் இயேசுவையும் ஒப்புக்கொடுத்தார். நமக்hகத்தான் பிதாவும் அவரோடு உடன்படிக்கை செய்தார். நமக்காகவே அவர் உலகத்தில் வந்தார். நமக்காகவே சகல நீதியையும் நிறைவேற்றினார். நமக்காகவே பாவ பலியானார். நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து பரமேறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

கிறிஸ்து நம்முடைய பதிலாளி. மேலான உடன்படிக்கைக்குப் பிணையாளி. ஆகையால்தான் நம்மை விடுவிக்க தேவன் அவரை தண்டித்தார். நம்மைத் தப்பிவிப்பது மட்டுமல்hமல் ஜீவனும், புத்தியும், சகல உரிமையையும் இலவசமாய் தருகிறார். எங்கள் அருமை இரட்சகரே, எங்களுக்காக பிதா உம்மைத் தண்டித்தார். பிசாசும் உம்மைச் சும்மா விட்டு வைக்கவில்லை. குற்றவாளியான மனுஷர்களும் உம்மைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் நாங்களோ, உம்மைக் கோபப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும், உம்மை மனம் நோகச் செய்யாதபடி காத்துக் கொள்ளவும், உமது நாமத்தை வீணிலே வழங்காதிருக்கும்படி நடக்கவும், எங்களுக்குக் கீழ்ப்படிகிற இருதயத்தைத் தந்தருளும்.

முள்கிரீடத்தில் எங்களுக்கு
மகிமை சம்பாதித்தீர்
ஐங்காயங்களால் பாவிகட்கு
சுகம் வரப்பண்ணினீர்.

புத்திரசுவிகாரத்தின் ஆவி.

பெப்ரவரி 02

“புத்திரசுவிகாரத்தின் ஆவி.” ரோமர் 8:15

பாவிகளாகிய நம்மை இரக்கத்திற்காகக் கெஞ்சும்படி செய்கிறவர் ஆவியானவரே. பிறகு நேசிக்கும் பிள்ளைகளாகும்படி நம்முடன் உறவாடுகிறவரும் இவரே. யேகோவாவின் கிருபை நிறைந்த குணநலன்களை நமக்கு வெளிப்படுத்தி, நமது இதயத்தில் அவரில் வாஞ்சைக்கொள்ளும்படி செய்து பிதாவின் அன்பை நமது உள்ளங்களில் ஊற்றி அப்பா பிதாவே என்று நம்மை அழைக்கச் செய்கிறவதும் இந்த ஆவியானவரே. உலக தோற்றத்திற்கு முன்னே புத்திரசுவிகாரத்தின் சிலாக்கியத்திற்கு நாம் முன் குறிக்கபட்டிருந்தாலும்,பரிசுத்தாவியானவரின் துணைக் கொண்டுதான் சகலத்தையும் அறிய முடியும்.

ஆவியானவர்தான் இருதயத்தைத் திருப்பி, மேலான சிந்தனைகளைக் தந்து, உள்ளத்தைச் சுத்திகரித்து, நோக்கங்களைச் சீர்ப்படுத்தி, சத்தியத்தில் நடத்துகிறார். மேலும் பாவத்தைச் சுட்டிக்காட்டி உணர்த்தி, மனந்திரும்பச் செய்து சமாதானத்தினாலும், உத்தமத்தாலும் நிரப்புகிறார். அவர் நம்மை நடத்தும்போது ஜெபம் இனிமையாகிவிடும். தியானம் பிரயோஜனமாகிவிடும். விசேஷமான வெளிப்பாடுகள் ஆனந்தங்கொடுக்கும்.

நண்பரே, இந்தப் புத்திரசுவிகார ஆவியானவர் உன்னிடத்தி; உண்டா? பிள்ளையைத் தகப்பனிடம் நடத்துகிறதுப்போல நடத்துகிற ஆவியானவரை நாடுகிறாயா? ஆற்றி தேற்றி உன்னை அணைக்கும்போது அவரோடு இசைந்துப் போகிறாயா? அவரால் எழுதப்பட்ட தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிகிறாயா? அவர் ஜெபிக்க சொல்கிறபடி அவருடன் சேர்ந்து ஜெபிக்கிறாயா?

கர்த்தாவே உம் ஆவியை
என் உள்ளத்தில் ஊதிவிடும்
உமதன்பால் என்னை ஆள்கொள்ளும்
உம்மை விடேன் எந்நாளும்.

இலக்கை நோக்கித் தொடருகிறேன்

பெப்ரவரி 03

“இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”  பிலி. 3:14

விசுவாச பந்தயத்தில் ஓடுகிறவன். பந்தயப் பொருள் அவனுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்தம், மகிமை, பரலோகம் இவைகளே இந்தப் பந்தையப் பொருள். அவன் ஓடவேண்டிய ஓட்டம் பரிசுத்த வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஓட்டத்தில் அNநுக சத்துருக்கள் எதிர்ப்படுவார்கள். துன்பங்களும், சோதனைகளும் வந்தாலும் நமது குறி இலக்கை நோக்கியே கவனிக்க வேண்டும். அந்த இலக்கை அடைய வேண்டுமென்றே அவன் அனுதினமும் போராட வேண்டும். கிறிஸ்து வைத்த வாழ்க்கையின் மாதிரியே அந்த இலக்கு. அவரைப்போலவே நாம் மாறவேண்டும். அவரைப்போன்றே பாவத்தைப்பகைத்து, சாத்தானை ஜெயித்து, சோதனைகளைச் சகித்து, ஓடவேண்டும்.

இயேசுவோ தமது முன்வைத்த சந்தோஷத்தை நோக்கிக் கொண்டே பந்தயச் சாலையில் ஓடி தமது இலக்கை அடைந்து, கிரீடத்தைப் பெற்று ஜெய வீரராய் தேவ வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவர்தான் நமக்கு முன்மாதிரி. நமது விசுவாசத்தைத் துவக்கி முடிக்கிறவரும் அவரே. நமது கண்களும் கருத்தும் அவர் மேலிருக்க வேண்டும். அவர் தேடிய விதமாகவே நாமும் தேடவேண்டும். அப்போஸ்தலனைப்போல் ஒன்றையே நோக்கி, அதையே நாடி இல்கை நோக்கி தொடர வேண்டும். அப்போதுதான் பந்தையப் பொருள் கிடைக்கும். ‘நான் ஜெயங்கொண்டு பிதாவின் சிங்காசனத்தில் அமர்ந்ததுப்போல, ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடுகூட உட்காரும்படி கிருபை செய்வேன்’ என்று கிறிஸ்துவும் சொல்லுகிறார்.

நாம் ஓடும் ஓட்டத்தில்
இரட்சகரையே நோக்குவோம்
அந்த இலக்கை நோக்கினால்
பந்தயப் பொருளைப் பெறுவோம்.

தேவனை மகிமைப்படுத்துங்கள்

பெப்ரவரி 24

“தேவனை மகிமைப்படுத்துங்கள்.” 1.கொரி. 6:20

தேவன் செய்கிற எல்லாமே தமது மகிமைக்காகத்தான். சகலமும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். நாமும் அவரின் மகிமைக்காகவே சிருஷ்டிக்கப்பட்டோம். பாவம் செய்தபோதோ நாம் அவர் மகிமையைச் சீர்குலையப்பண்ணினோம். அவரின் நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல் அவருக்கு எதிர்த்து நின்றோம். அவரின் சாயலை நம்மில் நாமே கெடுத்துக் கொண்டோம். அவரின் சமுகத்தைத் தீட்டுப்படுத்தினோம். ஆனால இயேசுவானவரோ நமக்காக மரித்து, நம்மை மீட்க தம்மைத் தந்து, நீதியை நிறைவேற்றி இரட்சிப்பை ஈந்தார்.

நாம் அவரின் கிரயத்தால் வாங்கப்பட்டவர்கள். ஆகவே நாம் நம்முடையவர்களல்ல. நாம் அவரின் சொந்தமானதால் அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை. தேவனை மகிமைப்படுத்துவதே இவ்வுலகில் நமக்குக் குறிக்கப்பட்டிருக்கிற பெரிய வேலை. அவருக்கு மகிமையைச் செலுத்துவதென்றால் அவரை விசுவாசித்து, அவர் வாக்குகளை நம்பி, அவர் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதே ஆகும். அவர் நிமித்தம் நாம் எளியோருக்கு நன்மை செய்ய வேண்டும். தேவ பக்தரை ஆதரிக்க வேண்டும். அவர் சுவிசேஷத்தை உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டும். நம்முடைய கெட்ட குணங்களை அடக்கி, அவருக்குப் பயப்படுகிற பயத்திஈ; நம்முடைய குடும்பங்களை வளர்த்து, சகலத்திலும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். தேவனுக்கு மகிமை செலுத்துவதே நமது தலையானகடமை, நமது ஊழியம். அதுவே நம்முடைய மகிழ்சியும் ஆனந்தமுமாய் இருக்க வேண்டும்.

என்னை மீட்க வந்து
இரத்தம் சிந்தி மாண்டீர்
உமக்கென்று பிழைக்கவும்
உம்மையே போற்றவும் செய்வீர்.

என் ஆலோசனை நிற்கும்

பெப்ரவரி 20

“என் ஆலோசனை நிற்கும்.” ஏசாயா 46:10

மனுஷன் செய்யும் யோசனை சரியற்றதும் புத்தியற்றதுமாய் காணலாம். அவனுக்கிருக்கும் அறிவு குறைவுள்ளது. மனதும் ஒழுங்கற்றது. ஆனால் கர்த்தரின் யோசனையோ, அளவற்ற ஞானமும் சர்வ வல்லமையுள்ளதாயிருக்கும். மனிதர் தங்களின் காரியங்களைத் தகாத நோக்கத்தோடு முடிவு செய்கிறார்கள். ஆகவே அவர்கள் தத்தளித்து கலங்குகின்றனர். தேவத் தீர்மானங்களோ அமர்ந்த, உறுதியுள்ள, நித்திய யோசனையிலிருந்துண்டாகி, நீதி, கிருபை, பரிசுத்தம், உண்மை, அன்பு இவைகளால் நடத்தப்படுகிறது. மனிதனுடைய யோசனை அடிக்கடி விருதாவாய் போய் விடலாம். தேவ யோசனை மட்டும் என்றுமே விருதாவாகாது. மனித யோசனை பிறரைத் தீமைக்கு வழி நடத்தலாம். தேவ யோசனையோ சகலமும் நம்மைக்கே என்றிருக்கிறது. அவரின் யோசனையில் நமக்கு நித்திய நன்மையும் அடங்கியிருக்கிறது. இம்மைக்குரிய சகல சம்பவங்களும் அவருடைய எண்ணத்தில் அடங்கியிருக்கிறது.

ஆதலால் எதற்கும் நாம் கலங்க வேண்டிய அவசியமில்லை. கொடுமை, அநியாயம், போராட்டம் இருக்கலாம். சுழல் காற்றிலும் பூசலிலும் நடத்துபோகிற நமது தேவன், ‘என் யோசனை நிலைநிற்கும்” ‘எனக்குப் பிரியமானதையெல்லாம் செய்வேன்” என்கிறார். அன்பரே, நமது தேவன் எப்போதும் எவ்விடத்திலும் கிரியை செய்கிறார் என்று மறந்து போகாதீர்கள். வானத்திலும், பூமியிலும் அவர் தமது சித்தப்படியே செய்து, நம்மை பார்த்து, நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறியுங்கள் என்கிறார்.

என் குறைவை தேவன் நீக்கி
இறங்கி என்னை இரட்சிப்பார்
தம் ஆலோசனைப்படி நடத்தி
மோட்சக் கரை சேர்ப்பார்.

நானோ ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கிறேன்

பெப்ரவரி 09

“நானோ ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கிறேன்.” சங். 109:4

விழிப்பும் விண்ணப்பமும் எப்போதும் இணைபிரியாதிருக்க வேண்டும். ஜெபிக்கிற கிறிஸ்தவன் விழிக்க வேண்டும் விழிக்கிற கிறிஸ்தவன் ஜெபிக்கவேண்டும். ஒன்று மற்றொன்றுக்குத் துணை. நம்முடைய வேலைகளைப் பார்க்கும்போதும் தினசரி அலுவல்களைக் கவனிக்கும்போதும் ஜெபம் மிகவும் அவசியம். அது எண்ணற்ற தீமைகளுக்கு நம்மைக் காத்து மேலான நன்மைகளை நமக்கு கொண்டு வருகிறது. ஜெபத்திற்குச் செவிகொடுப்பதே தேவனுக்குப் பிரியம். உத்தமருடைய விண்ணப்பம் அவருக்குப் பிரியம். அவரை நோக்கி மன்றாடுவது அவருக்குச் சந்தோஷம் என்று எண்ணத்தோடு அவர் சமுகம் போவோமாக.

ஒரு தகப்பனைப்போல் அவர் என்னைக் கண்ணோக்குகிறார். தகப்பனைப்போல் செவி கொடுக்கிறார். அவர் சிம்மாசனத்தண்டை நான் சேராமல் என்னுடைய விண்ணப்பங்களை ஆத்திரத்தோடு செய்து முடிக்கும்போது அவர் விசனப்படுகிறார். தைரியமாய் வா என்று அவர் அழைக்கிறார். அவர் கூப்பிடுதலைக் கவனியாதேப்போனால் ஏதாவது ஓரு துன்பத்தை அனுப்புவார். ஒரு பூசலைக் கட்டளையிடுவார். நம்மை அவர் சிம்மாசனத்தண்டை துரத்த ஒர சத்துருவை எழுப்பி விடுவார். நமது துயரங்கள் நம்மைப் பார்த்துத் தெளிவாய்ச் சொல்கிறதை நாம் கவனிப்போமானால் அவைகள், ‘முழங்கால் படியிடு. உன் ஜெப அறைக்குப்போ அறைக்குப் போ, உன் தேவனை நோக்கிக் கூப்பிடு’ என்று கூறும் சத்தங்கள் கட்டாயம் கேட்கும்.

இடைவிடாமல் ஜெபம்பண்ண
தாரும் வரம் தேவனே
நான் உம்மோடே நடக்க
உமதாவி அருளுமே.

விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்

பெப்ரவரி 06

“விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்.” புல. 4:2

இரட்சகராகிய இயேசு தம்முடைய ஜனங்களுக்கு அருமையாயிருக்கிறதுபோல, அவர்களும் தமது ஆபரணங்களென்றும் தமது விசேஷித்த பொக்கிஷங்களென்றும், நமது பங்கென்றும் அவர் சொல்லுகிறார். அவர்கள்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு ஆச்சரியமானது. தமது பிள்ளைகளை மிகவும் வேண்டியவர்களாய் எண்ணியபடியால், தனது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களை மீட்டார். அவ்வளவு உயர்ந்த விலைக்கொடுத்து மீட்டதால் அவர்களைக் கைவிடவே மாட்டார். நேசர் தமது ஜனங்களுக்கு அருமையாயிருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? அவர் அவர்களுக்கு எவ்வளவோ உதவிகளையும், நன்மைகளையும் செய்கிறார். பல வழிகளில் அவர்களோடு ஐக்கியப்படுகிறார். அவர் எவ்வளவோ அருமையானவர். நாம் அவர் பார்வையில் அருமையாயிருப்பதுதான் அதிக ஆச்சரியம்.

நாம் எவ்வளவு பாவிகள், எவ்வளவு நிர்பந்தர், எவ்வளவு கொடியவர்கள், எவ்வளவு நிர்விசாரிகள். அவரின் வழிகள் நம்முடையவைகள் அல்ல. அவருடைய நினைவுகள் நம்முடைய நினைவுகள் அல்ல. அப்படியருந்தும் நம்மை, அருமையான பிள்ளைகளாக, அழகான மனையாட்டிகளாகப் பாவிக்கிறார். அவ்வளவுக்கு அதிகமாய் அவர் நம்மை நேசிக்கிறார். இது மகிமை நிறைந்த சத்தியம். மனிதர் நம்மைக் குறித்து என்ன நினைத்தாலும் அவர் நம்மை விலையேறப்பெற்றவர்களாய் நினைக்கிறார். நாம் விலையேறப்பெற்றதால்தான் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள். இந்தச் சிந்தையோடு இந்த இரவில் படுக்கைக்குச் செல்வோமாக. பரிசுத்தவான்கள் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள்தான். அவர்கள் மரணமும் அருமையானதுதான்.

இயேசு சொல்வதைக் கேள்
அவரை விட்டுப் பிரியாதே
பிழைத்தும் செத்தும் பக்தர்
அவருக்கு அருமையானவர்களே.

நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்

பெப்ரவரி 28

“நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.” யோவான் 14:19

கிறிஸ்துவும் அவர் ஜனங்களும் ஒன்றுதான். அவர் தலை, அவர்கள் அவயங்கள். அவரிடத்திலிருந்தே ஜீவனையும், யோசனையையும், வல்லமையையும், பரிசுத்தத்தையும் மற்றெந்த கிருபையையும் பெற்றனுபவிக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கத்தக்கதான நிறைவு அவரிடத்தில் உண்டு. அந்தப் பரிபூரணத்திலிருந்து அவர் தினந்தோறும் வேண்டியதைக் கொடுக்கிறார். இந்நாள் வரையிலும் நமக்கு வேண்டிய கிருபையை இரட்சகர் கொடுத்து வந்தார். இனிமேலும் கொடுத்து வருவார். தேவனாக அவர் இருக்கிறார். தேவனுடைய மக்களுக்கு அவரின் செல்வாக்கைக் கொடுத்துதவுகிறார்.

தமது வார்த்தையை நிறைவேற்றி, தமது கிரியையைப் பூரணப்படுத்தி நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவர்களை அவுர் பிழைப்பூட்டுகிறார். அவர்களும் உயிரடைகிறார்கள். உயிரோடிருக்கம் கிறிஸ்து அவர்கள் ஜீவனும் அவர்கள் பிரதிநிதியும் அவர்கள் பிணியாளியுமாய் இருப்பதால் அவர்கள் பிழைப்பார்கள். அவர் காத்து முடிவு பரியந்தமும் வழி நடத்துவதால் அவர்கள் பிழைத்திருப்பார்பள். அவரே அவர்களை ஆண்டு நடத்தி பாதுகாத்து நேசித்து அவர்களை நடத்துகிறார். அவர் பிழைத்திருக்கிறார். தம்முடையவர்களையும் பிழைப்பூட்டுகிறார். அவர்களில் ஜீவன் அவரோடு மறைந்திருக்கிறது.

அன்பர்களே! உங்கள் சந்தோஷத்துகு;கு ஊற்று தேவ ஞானத்தான். உங்களுடைய ஜீவனும் சுகமும், கிறிஸ்துவினுடைய ஜீவனோடும் சுகத்தோடும் ஒன்றுபட்டிருக்கிறது. உங்கள் ஜீவனாகிய கிறிஸ்து சீக்கிரம் வருவார். அவரோடு நீங்களும் பிழைத்து என்றென்றும் அவரோடிருப்பீர்கள்.

இயேசு என்றும் ஜீவிக்கிறார்
நானும் என்றும் ஜீவிப்பேன்
அவர் வாக்களிக்கிறார்
நான் அதன்மேல் கட்டுவேன்.

கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்

பெப்ரவரி 04

“கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்.”  மத். 24:6

அதாவது கவலைக்கொள்ளாதபடி மனமடிவாகாதபடி, திகையாதபடி எச்சரிக்கையாயிருங்கள். துன்பங்களைத் தைரியமாய்ச் சந்தித்து, பொறுமையோடும், மனதிடனோடும் சகித்து தேவனுக்கு முற்றிலும் கீழடங்கப் பாருங்கள். உலகத்தார் கலங்கி நிற்கலாம். நீங்கள் கலங்கக்கூடாது. நீங்கள் என் தொழுவத்தின் ஆடுகள். என் வீட்டின் குமாரர்கள். என் தோட்டத்து வேலையாள்கள். நீங்கள் கலங்கக்கூடாது. உங்கள் காரியங்கள் அனைத்தும் அன்பினாலும் ஞானத்தினாலும் திட்டமிடப்பட்டிருக்கிறது. நீங்கள் என் கரத்தில் சுகமாயிருப்பவர்கள். நீங்கள் உங்களைத் தீங்கிற்கு விலக்கி காப்பதற்கு நான் எப்போதும் உங்களோடிருக்கிறேன். கண்ணீரைத் துடைத்து உங்கள் மனதை லேசாக்குகிறேன். ஆகவே நீங்கள் கலங்கக்கூடாது.

நடக்கிறவைகளெல்லாம் உங்களுக்கு நன்மையாகவேதானிருக்கும். நீங்கள் கவலைப்படும்போது என்னைக் கனவீனப்படுத்துகிறீர்கள். ஆகவே மனகலக்கத்திற்கும் வீண் கவலைக்கும் இடங்கொடாதபடி பாருங்கள். கலங்காதிருக்க என்ன வழி என்று கேட்கிறீர்களா? என் வசனத்தை உறுதியாய் நம்புங்கள். என்னோடு எப்போதும் நடவுங்கள். உங்கள் பயங்கள், எனக்குச் சொல்லுங்கள். உங்கள் கவலைகளையும், சுமைகளையும் என் பாதத்தருகே வையுங்கள். எல்லாவற்றிற்கும் முடிவு வரும் என்று அறியுங்கள். தேவன் உண்மையுள்ளவர். அவர் என்னோடிருக்கிறார் என்று நினையுங்கள். துன்பங்களைச் சகிக்கிறதற்குத் தேவையான உதவி கிடைக்குமென்று எதிர்பாருங்கள். நீங்கள் என்னோடு ஐக்கியப்பட்டவர்கள் என்பதை மறந்துப்போகாதீர்கள். சிநேகிதரே, நாம் கிறிஸ்துவோடிருந்தால் கலங்க வேண்டியதில்லை. நீங்கள் அமர்ந்திருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி இருக்க முயற்சி செய்யுங்கள் என்று அன்பாய் உங்களுக்குக் கூறுகிறேன்.

என் மனமே நீ கலங்காதே
தேவ சித்தமுண்டு காத்திரு
உனக்கு விளங்கா விட்டாலும்
எல்லாம் சுபமாய் முடியும்.

அவர் நம்மேல் இரங்குவார்

பெப்ரவரி 22

“அவர் நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

நாம் பாவம் செய்ததால் நம் பேரில் அவருக்குக் கோபம் ஏற்பட்டது. ஆனால் எப்போதுமே அவர் கோபத்தோடிருப்பவரல்ல. நமது பாவம் நம்மை நிர்மூலமாக்குமானால் தேவ இரக்கம் நம்மை பாக்கியவான்களாக்குகிறது. அவர் வார்த்தையின்படி ஆறுதலும் தேறுதலும் உண்டாகும்படி நமக்கு இரங்குவார். அவர் உருக்கம் நிறைந்தவர். அவர் இரக்கத்தில் சம்பூணர். மன்னிக்க ஆயத்தமானவர். இவைகள் தேவனுடைய சொந்த வாக்கியங்கள். நாம் அவைகளை மட்டும் நம்பினோமானால் நம்முடைய பங்களும், திகிலும் பறந்தோடும். நம்முடைய சந்தேகங்களும் மறைந்துப்போம். நாம் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பப்படுவோம்.

நாம் அவரைவிட்டு வீணாய் அலைந்தோம். ஆனாலும் அவர் நம்மேல் இரங்கினார். அலைந்துதிரிந்த ஆட்டைத் திரும்பவும் சேர்த்துக் கொள்கிறார். கெட்ட குமாரனை, ஆடல் பாடலோடு வரவேற்றுக் கொள்கிறார். சாத்தான் என்ன பழி சொன்னாலும் அவர் மனம் துருகவே உருகுவார். உன் பாவங்களும், பயங்களும் வெகுவாய் இருந்தாலும் அவர் மனம் உருகிவிடுகிறார். அவர் வாக்களித்தபடியாலும், அவர் தன்மையின்படியும் இரக்கமுள்ளவராயிருக்கிறார். எத்தனை முறை நமக்கு அப்படி செய்திருக்கிறார். இப்போதும் அவர் மனம் உருக்கத்தால் பொங்குகிறது. நீ பாவத்திற்காக மனம் வருந்துவதைக் கண்டாலோ தப்பிதங்களுக்காக அழுகிறதைப் பார்த்தாலோ அவர் உருகி விடுகிறார். உன் அக்கிரமங்களையெல்லாம் நிராகரித்து உன் பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டு விடுகிறார்.

இயேசு மனதுருகி
காயம் கட்டுவார்
துக்கிப்பவர்களுக்கு
ஆறுதலளிப்பார்.

Popular Posts

My Favorites

இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை

யூலை 25 "இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை" மத்.17:8 மோசேயும் எலியாவும், சீஷர்களோடு மலையின்மேல் இருந்தார்கள். அவர்கள் போனபின்பு இயேசுவானவர்மட்டும் இருந்தார். உலகில் எல்லாம் மாறிப்போகிறது. சுகம், ஆஸ்தி, வாலிபம், இன்பங்கள், மனிதன் எல்லாமே மாறிப்போகிறது....