B

Boomikoru Punitham

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ
மன்னவனின் பிறப்பால்
பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ
விண்ணவனின் வரவால்
பாவமில்லை இனி சாபமில்லை
இன்பத்திற்கும் இனி எல்லையில்லை
இறைவன் பிறந்ததால்

வானங்களும் வந்து வாழ்த்திடுதே
வசந்தத்தின் துவக்கநாள்
கானங்களும் காதில் கேட்டிடுதே
காரிருள் அகன்ற நாள்
இரவினில் தோன்றும் உதயமே
நம் இயேசுவின் பிறந்தநாள்
பாதகர் நம்மில் பாவத்தை மீட்க
பாலனாய் வந்த நாள்

தூதர்களின் கானம் ஒலிக்குதே
தூயவர் தோன்றும் நாள்
உயிர்களில் புத்துயிர் தோன்றுதே
உன்னதர் வந்தநாள்
பாலையில் வந்த சோலையே
நம் பாலகன் பிறந்தநாள்
பாதகர் நம்மில் பாவத்தை மீட்க
பாலனாய் வந்தநாள்