E

Ennai Maravaa

என்னை மறவா இயேசு நாதா

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அருந்துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே

பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவரு மென்னை

திக்கற்றோராய்க் கை விடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீ அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே

உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுவேன் உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே