I

Irivaa Yesuvae

இறைவா இயேசுவே

இறைவா இயேசுவே
உம்மை நான் அழைக்கிறேன்
என்னுள்ளம் நீர் தங்கும் ஆலயம்

ஆலயத்தை ஒருவன் கெடுத்தால்
அவனை நான் கெடுப்பேன் என்றீர்
ஆலயத்திலே சுத்தம் நிலவ
ஆலயத்திலே ஜெபமும் பெருக
ஆவியால் நிரப்பும் என்னை – உமது
ஆவியால் நிரப்பும் என்னை

அன்பு என்னும் தீபம் எரிய
இச்சை என்னும் தீமை விலக
தூபவர்க்கமாய் வெள்ளை போளமாய்
குங்குலியமாய் சாம்பிராணியாய்
ஜெபங்களை ஏறெடுப்பேன் – எனது
ஜெபங்களை ஏறெடுப்பேன்

ஆவியின் கனிகள் பெருக
மாம்சத்தின் கிரிகை ஒழிய
அன்பு என்னும் தீபம் எரிய
பாசம் என்னும் ஒளியும் வீச
அபிஷேகத்தைலம் ஊற்றுமே – என்மீது
அபிஷேகத்தைலம் ஊற்றுமே