கடவுள் உண்டு தான்
கடவுள் உண்டு தான்
அதுவும் ஒன்று தான்
கற்பனையில் உருவாகும் கல்லும்
மண்ணும் கடவுளல்ல
மடமை என்று ஓர் மடத்தின்
மண்டபத்தின் மலை உச்சியில்
உடமையும் பொருள் கொடுத்து
முடியும் பண்டிகை கடவுளல்ல
கூழுக்கு வழியில்லா மக்கள்
விதி மட்கி மாளும் போது
ஆளுக்கொரு தெய்வம் என்று
நாளுக்கொரு சடங்குகள் ஏன்
உள்ளத்தின் அன்பாகி உலகத்தின்
ஒளியான எள்ளத்தும் களமில்லா
இயேசுவே கடவுள் என்போம்
பாவத்தை கண்ணீராக பருகுகின்ற
மாந்தர்களின் சாபத்தை தொலைப்பதற்கு
சாத்திரங்கள் என்ன செய்யும்
பாவத்தின் பலியாகி பரலோகம் வழியாகி
பாவத்தின் பலியாகி …. ஆ ….
சிலுவையில் சாபம் தீர்த்த
இயேசுவே கடவுள் என்போம்