Y

Yesai Nambithaan

இயேசு நம்பி தான் நான்

இயேசு நம்பி தான் நான்
வாழ்ந்திருக்கேன் அவர்
பேச்சை நம்பித்தான் நான்
வளர்ந்திருக்கேன் இயேசு
வாக்குத்தத்தம் என் நெஞ்சிலே அது
வந்து வந்து தேத்தும்மா

தாய் என்னை மறந்தாலும் இயேசு
நான் உன்னை மறவேன் என்றார்
தந்தை என்னை வெறுத்தாலும்
என் இயேசு தாங்கி சுமப்பேன் என்றார்
பந்தங்கள் சொந்தகள் பாரினில் மாறிடும்
பரமன் இயேசுவோ என்றென்றும் மாறிடாரே

உலகம் முடிவு பரியந்தம் நான்
உன்னோடு இருப்பேன் என்றார்
இந்த உலகம் தரக்கூடாத சமாதானம்
உன்னிலே வைப்பேன் என்றார்
உன் மேல் என் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்வேன் என்றார்
உன்னை நான் ஒரு போதும்
கைவிட மாட்டேன் என்றார்

காலங்கள் மாறிவிடும் என் இயேசு
கர்த்தரோ மாறமாட்டார்
கோலங்கள் அழிந்து விடும்
என் இயேசு
கொள்கையோ நிலைத்து நிற்கும்
வானமும் பூமியும் ஒருநாள்
ஒழிந்திடும்
தேவனின் வார்த்தையோ
எந்நாளும் ஒழிவதில்லை