N

Nenjamellam Neerae

நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர்

நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர் தேவா
எண்ணி மகிழ்வேனே உமது அன்பை
என்றும் மறவேனே உமது அன்பை

நீரோடை வாஞ்சிக்கும் மான்களைப் போலவே
கர்த்தரின் சமூகத்தைத் தேடிடுவேன்
காலையும் மாலையும் தேவனின் பிரசன்னம்
என்னை நிரப்பும் மகிமையே

எண்ணிலடங்காத நன்மைகள் எனக்கு
செய்தவரே உம்மைத் துதித்திடுவேன்
இராச்சாமத்திலும் விழிப்புடன் இருப்பேன்
நேசரின் வருகைக்காய் காத்திருப்பேன்

மன்னவரின் லோகம் நான் மலரடி சேர
என்னை வழிநடத்தும் உமது வேதம்
சொன்ன மொழியாவும் என்னில் நிறைவேறும்
சத்திய வார்த்தைகள் நிச்சயமே