O

Oruvan Yesuvil Anbaiyirunthaal

ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால்

ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால்
இயேசுவின் வார்த்தைகளை கைக்கொள்கிறான்
இயேசுவில் அன்பாயிராதவன்
இயேசுவின் போதனையை புறக்கணிக்கிறான்
உயிருள்ள வார்த்தைகளை புறக்கணிக்கிறான்

இறைவனால் உண்டானவன் இறைவனின்
வார்த்தைக்கு அர்த்தமுள்ள போதனைக்கு
அன்பின் அறிவுரைக்கு செவிசாய்க்கிறான்
சத்தியத்தை அறிந்தவன்
விடுதலை அடைகிறான்
உண்மையை உணர்ந்தவன்
துணிவோடு வாழ்கிறான்
வேதமில்லையேல் வெற்றியில்லையே
இயேசுவின் போதனை தான்
மோட்சம் செல்லும் பாதையாம்

தெய்வத்தின் வார்த்தையை மீறுகின்ற
பரம்பரை நம்பிக்கைகள் மூட மரபுகளை
இயேசு கிறிஸ்து வெறுக்கின்றாரே
கடவுளின் மனதினை புரிந்திடுவோம்
கடவுளின் விருப்பம் செய்திடுவோம்
கடவுளை தள்ளி அவர் வார்த்தையை மறுத்தால்
அந்த வார்த்தையையே நாம்மை நியாயம் தீர்க்கும்

மனிதனின் வார்த்தைக்கு கீழ்படிவதைவிட
கடவுளின் வார்த்தைக்கு
முக்கியத்துவம் கொடுத்து
கீழ்ப்படிந்து நடக்க கடவுள் சொன்னாரே
திருச்சபை போதகர் சொல்லித் தந்ததை
மறைநூல் வாசித்து ஆராய்வோம்
உண்மையை உணருவோம்
அறிந்தபின் திருந்துவோம்
உண்மை ஒருநாள் ஜெயிப்பது நிச்சயம்