T

Thetratavaalan Yesuvae

தேற்றரவாளன் இயேசுவே

தேற்றரவாளன் இயேசுவே என்னைத் தேடி
வந்த அன்பு தெய்வமே
தாயைப்போல தேற்றுகிறீர் தந்தைப்போல்
தோளில் சுமக்கின்றீர்

வனாந்தரமான வாழ்க்கையிலே
வழியின்றித் தவிக்கும் நேரத்திலே
பகைவர்கள் சூழ்ந்திடும் நேரத்திலே
கடலினில் தரை வழி தந்தவர் நீர்
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா

இருண்ட வாழ்க்கைப் பாதையிலே
இன்னல்கள் சூழ்ந்த நேரத்திலே
இரவிலும் பகலிலும் நீர் எனக்கு
அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
நன்றி ஐயா, உமக்கு நன்றி ஐயா

மனுஷரின் வார்த்தைகள் மாராவாகி
மனதினில் துயரங்கள் சூழ்கையிலே
மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிமையின் வார்த்தையால் மகிழ்ச்சி தந்தீர்