விண்ணகத் தலைவனுக்கு
விண்ணகத் தலைவனுக்கு
மண்ணிணில் ஆராதனை
விண்ணிலும் ஆராதனை
மண்ணினில் மனுஷனை உருவமைத்து
ஜீவ சுவாசம் ஊதிவிட்டு
தனிமையில் இருந்த மனுஷனை நினைத்து
ஏற்றதுணை கொடுத்து மகிழ்ந்தவரை
ஏதேனில் தொடங்கிய பாவத்தினை
கொல்கொதா மலையில் முடித்துவைத்து
தூய இரத்தம் சிந்தி மீட்டவர்கள்
சீயோனில் பாடி மகிழவைத்த
மீண்டுமாய் வருவேன் என்றுரைத்த
பரிசுத்த ஆவியால் எமை நிறைத்து
தூதருடன் வரும் தெய்வத்தையே
காத்து நிற்ப்போம் வழி பார்த்து நிற்போம்
ஆவியின் கனியை எமக்கு தந்து
ஆத்தும பாரத்தை எமக்குள் வைத்த
ஆண்டவர் இயேசுவின் அன்பினை சொல்லி
ஆத்தும அறுவடை செய்திடுவோம்